‘‘உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்’’ என்கிறார் இயேசு. விளக்கமாகச் சொன்னால் கண்கள் ஒன்றை கெட்டதாக பார்த்தால், அது கெட்டதாகவே தோன்றும். தனிமையில் நின்று ஆணும், பெண்ணும் பேசினால் அதை நாம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப் பழகி விட்டோம். படிப்பு, பணம், உதவி, நட்பு சம்பந்தமாகவோ அவர்கள் விவாதிக்கலாம். தீய எண்ணத்துடன் பார்த்தால் மோசமான விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்களோ என்றே தோன்றும். மனதில் நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே கண்களும் நல்லதையே காணும்.