மதுரை : மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் கோயிலில் குருவார சத்சங்கம் பிரார்த்தனை நடந்தது.திருவருட்பிரகாச வள்ளலார் தலைமை வகித்தார். திருவடி புகழ்ச்சி ஜோதி அகவல் சிவபுராணம் படிக்கப்பட்டது. துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் ஜோதி ராமநாதன், தனபாலன், ராமகிருஷ்ணன், லதா, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வள்ளலார் அருள் விளக்கை தனலட்சுமி ஏற்றினார்.குரு ஆராதனை நடந்தது. நிர்வாகி நல்லதம்பி ஏற்பாடுகளை செய்தார்.