பதிவு செய்த நாள்
17
பிப்
2021
04:02
ஓமலூர்: ஓமலூர், தொளசம்பட்டி, அப்ரமேய பெருமாள் கோவில் தேர் திருவிழா, கடந்த, 11ல் கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. 14ல், கொடியேற்றம் நடந்தது. இன்று காலை, கோவில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை மாலை, முதல் நாள் தேரோட்டம் தொடங்கும். முக்கிய வீதியில் உலா வந்து, பிப்., 20ல், தேர் நிலையை அடையும். 21ல் சத்தாபரணம், 22ல், மஞ்சள் நீராட்டு விழா, 23ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.