* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான். * சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள். * பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான். * கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர். * பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் * இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான். * நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள். * அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பணம் சம்பாதிக்க வேண்டாம். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள். * வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள். * எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள். * நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். பொன்மொழிகள்