* ஊக்கமுடன் செயல்பட உற்சாகமே நல்ல மருந்து. * மனதில் மகிழ்ச்சி இருந்தால் முகத்தில் மலர்ச்சி இருக்கும். * விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியுடன் வாழுங்கள். * செயல்களில் ஈடுபடும் மனிதனுக்கே சமூகத்தில் மதிப்பு உயரும். * உங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள். * மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது. * இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழப் பழகுங்கள். * வயதானவரை அவமதிக்காதீர். அவர்களை பரிவுடன் நடத்துங்கள். * பெண்களின் ஆதரவின்றி உலகில் வாழ முடியாது. * பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுங்கள். * ஏழைகள் பேறு பெற்றவர்கள்; ஏனெனில் வானுலகம் அவர்களுக்கானது. * உங்களைத் துன்புறுத்துவோருக்கும் ஆசீர்வாதம் கூறுங்கள். * புகழ்ச்சியை மிகுதியாக விரும்புவது நன்மை தராது. பொன்மொழிகள்