சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் உள்ள வீரமுத்தி அம்மன் கோயிலில் மாசித்திருவிழா வழிபாடு துவங்கியது. இதையொட்டி பிப்.16ம் தேதி கோயிலில் காப்புக்கட்டப்பட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. பெண்களும், சிறுமிகளும் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பிப். 23ம் தேதி பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தலும், பிப். 24ம் தேதி பொங்கல் வைத்து வழிபாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.