Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ... ஸ்ரீராமர் கோவில் கட்ட 100 ரூபாய் தொழிலாளர் வழங்க வேண்டுகோள் ஸ்ரீராமர் கோவில் கட்ட 100 ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணி நிறுத்தம்
எழுத்தின் அளவு:
அகத்தீஸ்வரர் கோவில் புனரமைப்புப் பணி நிறுத்தம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2021
10:02

 பெண்ணாடம் - தீவளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் புனரமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூர் கிராமத்தில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அஞ்சல்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.போதிய பராமரிப்பின்றி நாளடைவில் கோவில் சுவர்களில் செடிகள் அதிகளவில் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு கோவில் சிதிலமடைந்தது. இதனால் 50 ஆண்டுகளுக்கு முன் திருவிழா மற்றும் பூஜைகள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டு, கோவில் பூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கோவிலை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின், கடந்த 2012ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை புனரமைக்க 12 லட்சத்து 54 ரூபாய் நிதி ஒதுக்கி, புனரமைப்பு பணிகளைத் துவங்கியது.ஆனால் கோபுரம், பக்கவாட்டு சுவர்கள் மட்டுமே புனரமைக்கப்பட்ட நிலையில் மற்ற பணிகளை துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கோவில் மீண்டும் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தீவளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகத்தீஸ்வரர் கோவில் புனரமைக்கும் பணியை மீண்டும் விரைந்து துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar