பதிவு செய்த நாள்
20
பிப்
2021
09:02
மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.காலை 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழா ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனம், திருமடத்தினர் செய்திருந்தனர்.