Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் ... தெய்வ பக்தியுடன் தேச பக்தியையும் வளர்த்து கொள்ள வேண்டும்:காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தெய்வ பக்தியுடன் தேச பக்தியையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவம் கோலாகலம்: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவம் கோலாகலம்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
06:02

திருக்கோஷ்டியூர் :திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இக்கோயிலில் மாசித் தெப்பஉத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.18 ல் துவங்கிய உற்சவத்தில் தினசரி காலை, இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.நேற்று காலை 7:00 மணிக்கு குழந்தை கண்ணன் கோலத்தில் வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தெப்பக்குளக்கரை மண்டபம் நோக்கு திருவீதி உலா புறப்படும். வழியில் பக்தர்கள் வழிபாடு நடைபெறும். மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் காலை 12:00 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. பின்னர் இரவு 9:30 மணி வரை மண்டபத்தில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிப்பார். பின்னர் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை 6:30 மணிக்கு தங்கப் பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் தெப்பக்குள மண்டபத்திற்கு திருவீதி புறப்பாடு துவங்கியது. வழியில் பக்தர்கள் பட்டு சார்த்துதலும், அர்ச்சனை வழிபாடும் நடைபெற்றது. காலை 10:50 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளலும், தொடர்ந்து குளத்தை வலம் வருதலும் நடைபெற்றது. மீண்டும் தெப்பம் மண்டபம் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 9:00 மணிக்குமீண்டும் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் வலம் வருதல் நடைபெறும். பிப்.28 காலையில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar