Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பனையடியான் கோவிலில் முப்பூஜை உலகை காத்த அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பில்லி சோறு எறியும் திருவிழா ஆலங்குடி அருகே கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
06:02

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, வாராப்பூரில் உள்ள பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத பெரிய அய்யனார் கோவிலில், மனித ரத்தத்தில் சோறு பிசைந்து, பில்லி சோறு எறியும் விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாராப்பூரில் பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத பெரிய அய்யனார் பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில்களில், மாசி மக திருவிழா நடந்தது.விழாவை ஒட்டி, நேற்று மதியம், 12:30 மணிக்கு, மனித ரத்தத்தில் சோறு பிசைந்து, பில்லி சோறு எறியும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், பரம்பரை வழக்கப்படி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தொடையை கீறி, அதிலிருந்து வந்த ரத்தத்தை, தயாராக இருந்த சோற்றில் ஊற்றி பிசைந்து, உருண்டையாக உருட்டி வைத்தனர். அதன்பின், 30க்கும் மேற்பட்ட பூசாரிகள், காட்டு பகுதியில் வீசுவதற்காக, அந்த பில்லி சோற்றை எடுத்துச் சென்றனர். காட்டு பகுதியில் மேல் நோக்கி வீசும் பில்லி சோறு, கீழே விழாது என்பது ஐதீகம்.இந்த பில்லி சோறு தயாரித்து, சுவாமிகளுக்கு படைக்கும் வரை, பூசாரி குடும்பத்தை சேர்ந்த ஒருவர், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த வேஷ்டி கூடாரத்துக்குள் அமர்ந்திருந்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, வைரத்தேர் திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar