காரைக்கால்: திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக திருவிழாவில் 7 பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நித்திய கல்யாண பெருமாள்.நிரவி கரியமாணிக்கப் பெருமாள். திருமருகள் வரதராஜ பெருமாள். திருப்பட்டினம் விழி வரதராஜ பெருமாள்.திருப்பட்டினம் ரகுநாதன் பெருமாள். பிரசன்ன வெங்கடேச பெருமாள். திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உள்ளிட்ட 7 பெருமாள் சுவாமிகள் நேற்று மாலை கடற்கரையில் எழுந்தருளினார்.பின் பெருமாளுக்கு தீர்த்தவாரி மற்றும் தீபாரதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடைபெற்றது முன்னதாக மறைந்த முன்னோர்களுக்கு கடற்கரையை திதி கொடுக்கப்பட்டது. இதில் அதிகாலை முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.கீதா ஆனந்தன். மாவட்ட எஸ்.பி.கள் வீரவல்லபன்.ரகுநாயகன் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.