* மனதில் எழும் ஒவ்வொரு நல்ல எண்ணமும் நிச்சயம் பலன் தரும். * தவறான செயல்களில் ஈடுபட்டு அகந்தையால் அதை மறைக்காதீர். * ஒழுக்கமுடன் வாழ்வதே நிம்மதியுடன் வாழ்வதற்கான வழி. * ஐம்புலன்களுக்கு அடிமையான மனம் எப்போதும் அலைபாயும். * சீடனின் மனதை சுதந்திரமாக்கும் சக்தி கொண்டவரே நல்ல குருநாதர். * நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான வழிகாட்டி. * அமைதி, பொறுமை, மன்னிக்கும் குணம் கொண்டவரே நல்ல மனிதர். * பேசுவதை விட மவுனமாக இருப்பதால் அதிக நன்மை கிடைக்கும். * வாயை மூடிய பின் மனம் அலை பாய்ந்தால் அது மவுனமாகாது. * ஒரே எண்ணத்தோடு இருக்கும் போது மனதின் சக்தி சேமிக்கப்படுகிறது. * எண்ணங்கள் நாலாபுறமும் சிதறிக் கொண்டிருந்தால் மனம் பலவீனம் பெறும். * வலையில் பிடிபடும் பறவை போல மூச்சுப்பயிற்சியால் மனதை அடக்க முடியும்.