* புகழ், கவர்ச்சிக்காக யாரும் பொதுவாழ்வில் ஈடுபடக் கூடாது. * விருப்பு, வெறுப்பு இன்றி கண்ணியமுடன் செயல்பட்டால் வாழ்வு சிறக்கும். * மிருக நிலையில் இருந்து பண்பட்ட நிலையை அடைவதே மதத்தின் நோக்கம். * உண்மையான கல்வி என்பது இரண்டாவது பிறப்புக்கு சமமானது. * மனதை ஒழுங்குபடுத்தி அதில் நல்லதை விதைப்பதே ஆன்மிகம். * பாரத பண்பாடு என்பது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. * அறியாமையை போக்கி அறிவும், அனுபவமும் ஒருசேர கிடைப்பதே ஞானம். * பள்ளியிலிருந்து கல்லுாரி வரை ஆன்மிகக் கல்வியை போதிப்பது அவசியம். * கட்டுப்பாடான முயற்சி, கடும் உழைப்பு இருந்தால் குறிக்கோளை அடையலாம். * பிறரிடம் அன்பும், சகிப்புத்தன்மையும் காட்ட வேண்டுமேயன்றி பழி வாங்க கூடாது. * புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும் மனதில் உள்ள வறுமை அபாயமானது. * சில நேரங்களில் பேசுவதை விட, அமைதியாக இருப்பதே பயனளிக்கும். * அறிவுநுால்களைப் படித்தாலும் ஞானம் இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகும். * முயற்சியும், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே ஒரு செயல் நிறைவேறும். * உணவிற்கு ஏற்ப மனஉணர்வு அமையும். குணத்தை உருவாக்குவதில் உணவின் பங்கு முக்கியமானது.