புதுச்சேரி- சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் பொய்யா மொழி விநா யகர் சுவாமிக்கு கண பதி ஹோமம் இன்று நடக் கிறது.புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கடந்த 27 ம் தேதி நடந்த மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்ற தீவனுார் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் சுவாமிக்கு கணபதி ஹோமம் மற்றும் வழியனுப்பு விழா இன்று (2ம் தேதி) நடக்கிறது.அதையொட்டி, காலை 9:00 மணிக்கு விநாயகருக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு மின் அலங்காரத்தில் விநாயக பெருமான் வீதி உலா நடக்கிறது.தொடர்ந்து, நாளை (3ம் தேதி) காலை 8:00 மணிக்கு அபிஷேக தீபாராதனை மற்றும் வழி அனுப்பும் விழா நடக்கிறது.