பதிவு செய்த நாள்
03
மார்
2021
10:03
பவானி, : பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், கருவறைக்குள் சென்று, பக்தர்கள் வழிபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானியில், 2௦௦ ஆண்டுகள் பழமையான செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா, கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன், கடந்த மாதம், 16ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான, பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர், காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தும், மஞ்சள், பால், தயிர், பன்னீர் ஆகியவற்றை தாங்களே அம்மன் சிலைக்கு ஊற்றி, அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ௮:௦௦ மணிக்கு துவங்கிய நிகழ்வு, நேற்று மதியம், ௧௨:௦௦ மணிக்கு முடிந்தது. இதில், 20 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டனர். இன்று பக்தர்கள், உடலில் சேறு பூசி, ஊர்வலமாக வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.