புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில் தெப்பல் உற்சம் நடந்தது. மாசிமக உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ரகுமாயி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு ரகுமாயி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்வசம், இரவு 10:00 மணி சுவாமி வீதியுலா நடந்தது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.