திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், 20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி நடக்கிறது. திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். மிகவும் பழமையான இக்கோவில், திருப்பணி செய்து 20 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பக்தர்களைக் கொண்டு திருப்பணி செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.