Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறத்தால் அடி வாங்கி வினோத ... ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சீரமைப்பு பணிகளில் பழங்கால ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கோவில் சீரமைப்பு பணிகளில் பழங்கால ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 மார்
2021
12:03

தேனி: தேனி அம்மச்சியாபுரத்தில் கோயில் சீரமைப்பின் போது பல ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சொந்தமான வேட்டை கருப்பசாமி கோயில் உள்ளது. கோயில் சேதமடைந்ததால் பூஜாரி ஈஸ்வரன் தலைமையில் நேற்று சீரமைப்பு பணிகளை துவக்கினர். கோயில் சுவர் இடித்த போது ஒரு பொருள் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதனை அப்பகுதியினர் எடுத்து பார்த்தனர். அதில் 100க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் இருந்தன. பல நுாறு ஆண்டு கோயிலில் இருந்த ஓலைச்சுவடி அப்பகுதியினர் ஆர்வமாக படித்தனர்.

அவைகள் தமிழ் வட்டெழுத்து முறையில் எழுத்துக்கள் இருந்தன.ஓலைச்சுவடி குறித்து சர்வேயர் கணேசன் கூறுகையில், எங்கள் மூதாதையர்கள் கருமாத்துார், திருச்செந்துார், கோவில்பட்டி பகுதியில் வசித்த பூர்வ குடிகள். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் அம்மச்சியாபுரத்தில் குடியேறினர். தற்போது கிடைத்துள்ள ஓலைச்சுவடியில் சில சேதம் அடைந்துள்ளது. சிலவற்றை ஆய்வு செய்தபோது ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்ததாக தெரிகிறது. அதில் குடும்பர் வரலாறு, பாண்டியர் வரலாறு, சிவன் கோயில் வழிபாடு, திருச்செந்துார் கோயில் ஆகியவற்றை பற்றிய குறிப்புகள் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடியாக இருக்கலாம். இதனை தெளிவாக படிக்க இயலவில்லை. எனவே, ஓலைச்சுவடிகளை தொல்லியல் துறையில் ஒப்படைத்து அதில் உள்ள விபரங்களை அறிய முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து ... மேலும்
 
temple news
ஆமதாபாத்; குஜராத்தின் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கு, 1,500 துாண்கள் தாங்கக்கூடிய அளவிலான மிகப்பெரிய ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்; பழையசீவரம், மன்னேரி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar