திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், நரசிம்ம பிரம்மோற்சவத்தில் இன்று அதிகாலை, கருடசேவை உற்சவம் நடக்கிறது.
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், இரண்டு பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நரசிம்ம பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் பிரதான விழாவான கருடசேவை உற்சவம் இன்று நடக்கிறது. அதிகாலை, 5:30 மணிக்கு உற்சவர் கருட வாகனத்தில், கோபுர தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார்.நாளை காலை, 6:30 மணிக்கு சூரிய பிரபை, இரவு, 8:00 மணிக்கு சந்திர பிரபை சேவையும் நடக்கிறது.