பதிவு செய்த நாள்
10
மார்
2021
10:03
பழநி : பழநியில் மாசித்திருவிழாவை தொடர்ந்து மாரியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து உற்சவ சாந்தி செய்தனர்.
பழநி வ.உ.சி., மன்ற தலைமையகம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்தில் இருந்து 1008 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன்கோயிலை அடைந்தது.உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
இரவில் உற்சவசாந்தி விழா நடந்தது. அம்மனுக்கு பத்மாவதி அம்மன் அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், கார்த்திகேயன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்கத்தலைவர் மாரிமுத்து, ஜெயம் சரவணன், சுவாமி விலாஸ் முருகேசன், மற்றும்வ.உ.சி தலைமை மன்ற தலைவர் அசோக்குமார், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர், மகளிர் அணி, இளைஞர் மன்றம் உட்பட பல முக்கிய அமைப்பினர் பங்கேற்றனர்.