* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை ஆக்கவே வந்திருக்கிறோம். * துணிவுடன் முன்னேறுங்கள். தற்போதைய நிலை குறித்து சிந்திக்காதீர்கள். * லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள். * முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள். * அரிய செயல்கள் நிறைவேற உழைப்பு, விடாமுயற்சியும் அவசியம். * எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். * செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள். * முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள். * குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள். * நாய்க்கு ஒரு பிடி சோறிட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள். * நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள். * தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி செலுத்தாத நாத்திகன் போன்றவன். * மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன். * ‘நான் எதையும் சாதிக்க வல்லவன்’ என்ற மனஉறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும். * பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும். * தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். * பாமரனைப் பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம். * உண்மை எங்கே அழைத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். * கோழையாகவும், வேஷதாரியாகவும் யாரும் இருக்காதீர்கள். * அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். * அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாக வாழச் செய்யும். * உயிர் வாழ்வதற்கான ஒரே அறிகுறி வளர்ச்சியடைவது தான். * எண்ணம், சொல், செயல் மூன்றாலும் விரிவடையுங்கள். அதுவே உண்மையான வளர்ச்சி.