தும்மல் வந்தால் சாதாரணமாக இருந்து விடக் கூடாது. அப்போது இதயம் சற்று நின்று மீண்டும் இயங்குகிறது. இதயம் நின்றால் உயிர் போய் விடும் என்ற இயற்கை நியதியை மீறி மீண்டும் நமக்கு உயிர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இறைவனின் அருளே. இப்படி ஒவ்வொரு தும்மலின் போதும், நமக்கு உயிரை மீட்டுத்தரும் இறைவனுக்கு நன்றி சொல்வது கடமை. உங்களில் ஒருவருக்கு தும்மல் வந்தால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். தும்மலிடும்போது அவரருகே சகோதரரோ, தோழரோ இருந்தால், ‘எர்ஹகமுகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்கு அருள் செய்வானாக) என்று சொல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் இப்படி அன்புடன் தெரிவித்தால் இருவருக்கும் இடையே உறவும், நட்பும் வளரும்.