தற்காலத்தில் சிலர் திருமணம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மணமக்களுக்கு ஈடான அலங்காரத்துடன் பங்கேற்கின்றனர். அழகுக்கலை நிலையம் சென்று பணத்தையும் செலவழிக்கின்றனர். சிலர் இதற்காக கடன் வாங்குகின்றனர். இதைக் கடுமையாக பைபிள் எதிர்க்கிறது. ‘‘பெண்கள் மிதமான ஆடைகள் அணியட்டும். நாணம் மிகுந்த முகம் இருக்கட்டும். புலனடக்கம் அவசியம். விரித்த தலையோடு அலையக் கூடாது. நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் அலங்கோலம் இது. விலை மதிப்பு மிக்க ஆடை, ஆபரணம் மீது அதிக நாட்டம் வேண்டாம்’’ என எச்சரிக்கிறது. எளியமுறையில் வாழ்ந்தால் செலவும் குறையும். குடும்பத்தில் நிம்மதியும் நிலைக்கும்.