ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2021 09:03
ராமேஸ்வரம் : மாசி திருவிழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு முத்தங்கி அணிவித்து தங்க பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் மாசி சிவராத்திரி விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் காலை 10:00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தனர். மாலை 6:00 கோயிலில் இருந்து சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் முத்தங்கி அணிவித்ததும், தங்க பல்லக்கில் எழுந்தருளினர்.பின் சுவாமி, அம்மன் முத்தங்கியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.