காரியாபட்டி: காரியாபட்டி வெற்றிலை முருகன்பட்டியில் முருகாருடைய அய்யனார், அழகுநாச்சி அம்மன் கோயில் மாசி பொங்கல் 10 நாட்கள் நடந்தது. எட்டாவது நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து சீலக்காரி அம்மன், பிள்ளையார் கோயிலில் வழிப்பட்டு, மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முக்கிய வீதி வழியாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.