பதிவு செய்த நாள்
11
மார்
2021
11:03
ராமநாதபுரம், : மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமநாதபுரம்உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயிலில், 50க்கும் மேற்பட்ட நடன, இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி இன்று (மார்ச் 11) மாலை 6:00 மணி முதல் நாளை (மார்ச் 12) மாலை 6:00 மணி வரை நடக்கிறது.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கலைபண்பாட்டுதுறை ஆலோசகர் நடனமாமணி பூர்ண புஷ்கலா கூறியதாவது:கடந்த 2 ஆண்டுகளாக மகா சிவராத்திரி விழா அன்று தொடர்ந்து 12 மணிநேரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.இவ்வாண்டு கொரோனா தடுப்புவிதிமுறை பின்பற்றி கோயில் மண்டபத்தில் இன்று(மார்ச் 11) மாலை 6:00மணி முதல் நாளை (மார்ச் 12) மாலை 6:00மணி வரை நாட்டியாஞ்சலி கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.பரதநாட்டியம், குச்சுப்புடி, ஆன்மிக சொற்பொழிகள், இசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதில் நடிகை குட்டி பத்மினி, சின்னத்திரை நடிகை சுமனா மற்றும் சென்னை தமிழ்சங்க தலைவர் இளங்கோவன், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஜெயக்குமார், ராமநாதபுரம் சமஸ்தான அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார் பரத்வாஜ், மன்னர் குமரன்சேதுபதி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதுரை, தஞ்சாவூர், சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நடன, இசை கலைஞர்கள் 50க்குமேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்,.இவ்வாறு அவர் கூறினார்.ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் உடனிருந்தார்.