பதிவு செய்த நாள்
11
மார்
2021
11:03
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலின் புதிய தங்கும் அறைகள் தயார் நிலையில் உள்ளதால் நேரடியாகவோ, ஆன் லைனில் பதிவு செய்து பக்தர்கள் தங்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து அறநிலையத்துறை ரூ.29 கோடியில் கார் பார்க் வசதியுடன் 98 தங்கும்அறைகள், ஹால்அமைத்தது.இதனை சமீபத்தில் முதல்வர் திறந்துவைத்தார். இந்த தங்கும் விடுதியை முறைப்படி நேற்று ஒப்பந்தகாரர்கள், ராமேஸ்வரம்கோயில் இணை ஆணையர் தனபாலிடம் ஒப்படைத்தனர்.குளிர்சாதன வசதியுள்ள புதிய தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்கிட வசதியாக நேற்று புக்கிங் செய்யப்பட்டது. ஏ.சி.,யுடன் இரு பெட்ரூம் ரூ.750ம், ஏ.சி.,இன்றி ரூ.500ம், 4 படுக்கை கொண்ட காட்டேஜ் ரூ.1750, இரு படுக்கை கொண்ட காட்டேஜ் ரூ.1000ம், டார்மெண்டரி அறைகள் ரூ.1200, ரூ.1600க்கு வாடகைக்கு உள்ளது. தனியார் லாட்ஜ்களை விட, பக்தர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கார் பார்க், சொகுசு வசதியுடன் அறைகள் உள்ளது. இங்கு பக்தர்கள் நேரடியாகவோ, ஆன் லைன் மூலம் http//rameswaramtemple.in எனும் மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யலாம்.