Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் ரிஷப ... சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி விழா சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

பதிவு செய்த நாள்

12 மார்
2021
04:03

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார்? பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பாகவும், லிங்கோத்பவர் வடிவாகவும் காட்சி கொடுத்த நாள், மகா சிவராத்திரி. இதையொட்டி நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, சுவாமி பெயருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் லட்சார்ச்சனை நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகம் வண்ண மலர்களாலும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நள்ளிரவு நடக்கும் லிங்கோத்பவர் சன்னதி வண்ணமலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 7:30 மணிக்கு, முதல்கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம்கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகமும், இன்று 12ல், அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நடக்கும், நான்காம் கால பூஜைக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் கடந்த நான்காவது ஆண்டாக, லட்ச தீபம் ஏற்ற, கோவில் நிர்வாகம் தடை விதித்ததால், லட்ச தீபம் ஏற்ற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது. ... மேலும்
 
temple news
கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியில் பழமை வாய்ந்த பெரியம்மா கோயில் உள்ளது. கோயில் ... மேலும்
 
temple news
திருநகர்; திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் 27ம் ஆண்டு புரட்டாசி பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar