கொண்டத்துக்காளியம்மன் கோவில் ரூ.11.88 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2021 03:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோயில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், மேற்பார்வையில் ஊத்துக்குளி ஆய்வாளர் ஆதிரை, கௌவில் செயல் அலுவலர் கங்காதரன், ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதில் 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 575 ரூபாய் பணமும், 73.500 மில்லி கிராம் தங்கமும், 123.500 மில்லி கிராம் வெளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் பிச்சம்பாளையம் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.. உண்டியல் இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.