மேலுார் : மேலுார், தும்பைபட்டி வீரகாளியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச். 5 ல் பக்தர்கள் காப்பு கட்டி 12 நாட்கள் விரதமிருந்தனர். நான்கு நாள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான நேற்று து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன், மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி பெரிய மந்தைக்கு கொண்டு வரப்பட்டது.மார்ச் 18 ல் பெரிய மந்தையில் இருந்து கோயிலுக்கு சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்படும். மார்ச் 19 ல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கொண்ட பக்தர்கள் சுவாமி சிலைகள், பதுமைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.