வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாசித்திருவிழாவில் மின் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. சேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்தில் மாரியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.