பதிவு செய்த நாள்
20
மார்
2021
06:03
அ.தி.மு.க., கூட்டணியில், ஊட்டி தொகுதி,பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்குபின், கோத்தகிரியை சேர்ந்த போஜராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், நேற்று படுகர் மக்களின் குலதெய்வமான பேரகணி மற்றும் பெத்தளா ஹெத்தையம்மன் கோவில்களில் காணிக்கை செலுத்திய பின், வேட்புமனு தாக்கலுக்கு சென்றார்.தொகுதிக்கு உட்பட்ட தொதநாடு கடநாடு கிராமத்தில், ஹிரோடைய்யா கோவிலிலும் காணிக்கை செலுத்தி, கிராமப்புறங்களில் ஓட்டு சேகரித்தார். போஜராஜனுக்கு மக்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தாமரை கோஷங்கள் முழங்குவதால், காங்., கட்சியினர் சற்று, அப்செட் ஆகி உள்ளனர்.