திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே புல்லாணி அம்மன் கோயிலில் எட்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மூலவர் புல்லாணி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஜெயராம் பட்டர் தலைமையில் ஹோம வேள்வி நடந்தது. வக்கீல் ராமச்சந்திரன், ஓதுவார் அரியமுத்து, பேஸ்கர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.