பதிவு செய்த நாள்
22
மார்
2021
11:03
வால்பாறை: வால்பாறையில் உள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வால்பாறை கலைஞர் நகர் பாலவிநாயகர், சூலக்கல் மாரியம்மன், முனீஸ்வரர் கோவிலின், 26ம் ஆண்டு திருவிழா, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.