திருப்பரங்குன்றத்து தேர் இழுக்க வாங்க... கிராமத்தினருக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2021 09:03
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஏப். 1ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 31 காலை 11:30 முதல் 11:45 மணிக்குள் நடக்கிறது. மறுநாள் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருள திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மலையை சுற்றி தேர் வலம் வரும்.தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி, முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் தலைமையில் துவங்கியது. வீடு, வீடாக வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை கொடுத்து அழைக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடக்கிறது.