பதிவு செய்த நாள்
25
மார்
2021
05:03
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம், இன்று மாலை நடக்கவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா, மலர் பல்லக்கு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று மாலை, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை, ஸ்ரீ அதிமூர்க்கம்மன் திருத்தேர் உலா நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. விழாவில் பங்கேற்போர், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்தேரோட்டத்தை முன்னிட்டு, சிறுவாணி ரோட்டில், இன்று மதியம், 3:00 முதல், இரவு, 7:30 மணி வரை, போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் வாகனங்கள், செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்டக்காமுத்துார் வழியாக செல்லலாம். சிறுவாணியில் இருந்து கோவை செல்வோர், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்துார் வழியாக செல்லலாம்.