பதிவு செய்த நாள்
25
மார்
2021
05:03
திருத்தணி: திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி மாதம், 13, 14 மற்றும் 15ம் தேதிகளில், மூன்று நாட்கள் சூர்ய பூஜை நடக்கிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்கான சூர்ய பூஜை, வரும், 26ம் தேதி முதல் நாள் சூரிய பூஜை நடக்கிறது.முதல் நாளில், காலை, 6:15 மணிக்கு, சூரியனின் ஒளிர்கதிர்கள், மூலவர் முருகப் பெருமானின் திருப்பாதம் மீதும், இரண்டாம் நாள், காலை, சூர்ய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், மூன்றாம் நாள், மூலவரின் தலை மீதும், சூர்ய ஒளிக்கதிர்கள் விழும்.அப்போது, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்படும்.