பதிவு செய்த நாள்
26
மார்
2021
11:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, தடைவிதித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதன்படி, வரும், 28ல், அதிகாலை, 3:12 மணி முதல், 29ல், அதிகாலை, 1:18 மணி வரை, பங்குனி மாத பவுர்ணமி திதி உள்ளது. ஆனால், கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில், 13வது மாதமாக, பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.