ஆனைமலை:ஆழியாறு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, நாளை கொடியேற்ற நிகழ்வுடன் துவங்குகிறது.ஆழியாறு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, நாளை, 30ம் தேதி இரவு கொடியேற்ற நிகழ்வுடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஏப்., 6ம் தேதி கம்பம் போடுதல், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை தீர்த்தம் எடுத்தல், 13ம் தேதி இரவு சக்தி கும்பம் அழைத்தல் நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மாலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 15ம் தேதி அம்மன் திருவீதியுலா, 18ம் தேதி இரவு மகாமுனி பூஜை நடக்கிறது.