பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா தடையை மீறி, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த, 13 மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, 28ல், அதிகாலை, 3:22 மணி முதல், இன்று, 29ல் அதிகாலை, 1:29 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், இத்தடையை மீறி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பத்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கிரிவலத்தின்போது, பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றனர்.