பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
பரமக்குடி : பரமக்குடியில் காமன் பண்டிகை விழாவையொட்டி, காமதகன நிகழ்ச்சி நடந்தது.
பங்குனி உத்திரம், ேஹாலிப் பண்டிகை விழாக்களைப் போன்றே ஒவ்வொரு ஆண்டும் காமன் பண்டிகை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.மன்மதனை நினைவு கூறும் வகையில் தெரு சந்திப்புக்களில் மரத்தை நட்டு வைத்து 10 நாட்கள் வரை இரவு பூஜை நடத்தப்படும். ரதி, மன்மதன் திருக்கல்யாணம்உள்ளிட்ட நிகழ்வு தொடர்ந்து நடக்கும். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகும் மன்மதனை எரிக்கும் படலமான, காம தகனம் நேற்றுமுன்தினம் நடந்தது.அப்போது சிறுவர்கள்உள்ளிட்ட ஆண்கள் பல்வேறு பகுதிகளில் ரதி, மன்மதன், சிவன், முருகன், விநாயகர் வேடமிட்டு, புராண காலங்களை நினைவு கூர்ந்தனர்.தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு மேல் பரமக்குடி, எமனேஸ்வரம், ஜீவாநகர், குமரக்குடி, சோமநாதபுரம், வெங்கடேஸ்வரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காமதகனம் நடந்தது.