திருவண்ணாமலை: திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருகல்யாண மண்டபத்தில், பராசக்தியம்மன் மற்றும் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் திருக்கல்யாணம் வைபோகம் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.