பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
பொள்ளாச்சி: நெகமம் அருகே, கருமாபுரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது.பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், கருமாபுரத்திலுள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:30 மணிக்கு விரதம் இடுதல் நிகழ்வுடன் திருவிழா துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.இன்று மாலை, 3:00 மணிக்கு, கோவிலுக்கு உருவாரங்கள் எடுத்து வருதல் நிகழ்வு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி அழைத்தல், நள்ளிரவு, 1:00மணிக்கு படுகளம் எழுப்புதல் நிகழ்வும் நடக்கிறது.நாளை அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ேஹாமம் மற்றும் அம்மன் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து, மாவிளக்கு ஊர்வலம், பக்தர்கள் நேர்த்திக்கடன் பூவோடு எடுத்தலும் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் பூஜை நடக்கிறது.