பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
கோவை : ஈஷா மஹா சிவராத்திரி விழா, நேரலை ஒளிபரப்பில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஈஷா யோகா மையம் செய்தி குறிப்பு: கோவை, ஈஷா யோகா மையத்தில், மார்ச் 11ல் மஹா சிவராத்திரி விழா, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுடன்பாதுகாப்பாக கொண்டாடப்பட்டது. சத்குருவுடன் தியானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி மற்றும் ரஷ்யன், சைனீஸ் உட்பட, 13 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்களில் மட்டும், இரண்டு கோடி பேர் பார்த்துள்ளதாக, போல் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவை பின்னுக்கு தள்ளி, உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த உலக சாதனைவாயிலாக, பாரதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மஹா சிவராத்திரி விழா,உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.