பதிவு செய்த நாள்
30
மார்
2021
05:03
ஐதராபாத் : தெலுங்கானாவில், பிரபலமான, 10 கோவில்களின் பிரசாதங்களை, பக்தர்கள் வீடுகளுக்கு தபால் வாயிலாக அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில், கொரோனா பரவலால், நேரில் வர இயலாத பக்தர்களுக்கு, 12 கோவில்களில், ஆன்லைன் வழிபாட்டு சேவைகள், கடந்தாண்டு துவங்கப்பட்டன. இதற்கிடையே, யாதகிரிகுட்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், பத்ராசலம் சீதா ராமச்சந்திர சுவாமி கோவில் உட்பட, 10 கோவில்களுக்கு நேரில் வர முடியாத பக்தர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி, நாட்டின் எந்த தபால் நிலையத்திலும், இதற்காக பக்தர்கள் பணம் செலுத்தினால், ஓரிரு நாட்களில், அவர்களின் வீடுகளுக்கு, பிரசாதம் வந்து சேரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.