புத்தேரி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2021 11:03
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் செங்கமலத் தாயாருக்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள செங்கமலத்தாயாருக்கு சிறப்பு அபிேஷகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.