பழநி முருகன் கோயிலில் இன்று முதல் தங்கரதம் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2021 11:03
பழநி : பழநி முருகன் கோயிலில் இன்று (மார்ச் 31) முதல் தங்கரதம் புறப்பாடு துவங்குகிறது.
பழநி முருகன் மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடக்கிறது. ரூ. 2 ஆயிரம் பணம் செலுத்தி மூன்று பக்தர்கள் தங்கரதம் இழுக்கலாம். பத்து நிலைகளில் தங்கரதப்புறப்பாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 26 முதல் நேற்று வரை தங்கரதப் புறப்பாடு நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று (மார்ச் 31) மலைக்கோயிலில் இரவு 7:00 மணிக்கு தங்கரதப் புறப்பாடு நடைபெற உள்ளது.