மயிலாடுதுறை: ஐயாறப்பர் கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஐயாறப்பர் வா ர வழிபாட்டு மன்றம் சார்பில் அம்மன்றத்தின் தலைவர் கனகசபை ரூ.30 லட்சம், சொந்த செலவில் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட் டத்தை துவக்கி வைத்தார். தேர் நான்கு வீதிகளின் வழியே சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில், ஆதீன கட்டளை ஸ்தானீகம் ஸ்ரீ மத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆதீன கட்டளை ஸ்தானீகம் ஸ்ரீ மத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.