பதிவு செய்த நாள்
31
மார்
2021
05:03
அன்னூர்: சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், பக்தர்கள் தங்களை சவுக்கால் அடித்து கொண்டு அம்மனை வழிபட்டனர். குன்னத்தூராம்பாளையத்தில், பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பூச்சாட்டு திருவிழா, கடந்த 16ம் தேதி, பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. 29ம் தேதி வரை, தினமும் மாலையில், கம்பம் சுற்றி ஆடுதலும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், கரகம் எடுத்தல், அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று காலையில், திருக்கல்யாண உற்சவம், அன்னதானம் வழங்குதல், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் வைத்தல் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், பக்தர்கள் சிலர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொண்டு, பக்திப் பரவசத்தோடு அம்மனை வழிபட்டனர்.