ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும்ரு 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆதிப்ரஹ்மோத்சவம் எனப்படும் பங்குனித் தேர்த்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது. இந்து ஆண்டுக்கான தேர்த்திருவிழா மார்ச் 20-ம் தேதி துவங்கியது.
விழாவை முன்னிட்டு உற்சவர் அழகிய மணவாளன் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்குச் சென்று வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித்தேர் எனப்படும் கோரதப்புறப்பாடு நேற்று 29-03-21 நடந்தது. இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்திலிருந்தபடி உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் நேற்று காலை 8.30 மணிக்கு பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார்.. அங்கிருந்து சித்திரைவீதி வடகிழக்கு மூலையில் நின்றிருந்த கோரதத்தில் காலை 9 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து உள்@ர் பிரமுகர்கள் முன்னிலையில் கோரதம் வடம் பிடிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கஸ்தூரி ரங்கா ! காவிரி ரங்கா என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அடுத்து சித்திரை வீதிகள் முழுவதும் தேர் ஆடி அசைந்து வந்து 11.15 மணிக்கு நிலையை அடைந்தது. பின் இரவு சப்தாவரணமும் நடந்தது. இன்று 30-ம் தேதி இரவு ஆளும் பல்லக்கு வீதி உலா நடக்க உள்ளது. இத்துடன் ஸ்ரீநம்பெருமாள் ஆதிப்ரஹ்மோத்சவம் நிறைவு பெறுகிறது.